சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸாரால் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. திசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேசத்திலுள்ள கைலைமடு பகுதியில் வைத்து மூன்று உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைவாக மேற்கொண்ட நடவடிக்கையின்போது இந்நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி முறையற்ற விதத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றியதால் உழவு இயந்திரத்துடன் சந்தேகநபர்களை கைதுசெய்ததாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பிந்திய செய்திகள்
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயரிழந்துள்ளனர்.
சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிர
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில
மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய மு
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.